காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்

கோடைகாலத்தை ஒட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்பட்டது.

Update: 2024-04-30 05:45 GMT

காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே சாலையில் சென்று பொதுமக்களுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவசமாக மோர் வழங்கப்பட்டது.

கோடைகாலத்தை ஒட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த 10 தினங்களாக வெப்ப சலனம் அதிகம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு பொதுமக்களை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியும் உடல் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானங்கள் மற்றும் உணவு வகைகள் பழங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக வெப்ப சலனம் அதிகம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் , காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில் சாலையில் வரும் பொது மக்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட்டது.


மூங்கில் மண்டபம் அருகே நடைபெற்ற இந்நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜி உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களுக்கு மோர் வழங்கி, வெப்பம் அதிகம் காணப்படுவதால் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டவும் அறிவுறுத்தினர்.

பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச மோர் வழங்கப்படுவதை கண்ட மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர் , போக்குவரத்து காவல் துறையின் சேவையை பாராட்டி போக்குவரத்து காவல்துறையினருக்கு உடனடியாக அருகில் இருந்த கண்ணாடி கடையிலிருந்து கூலிங் கிளாஸ் வாங்கி அனைவருக்கும் வழங்கி அவர்களது சேவையை பாராட்டினார்.

Similar News