நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 864 மாணவ மாணவிகள், 61 தேர்வு மையங்களில் நாளை தேர்வு எழுதவுள்ளனர்.

Update: 2022-05-05 12:30 GMT

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ( பைல் படம்)

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதலாவதாக பிளஸ் டூ அரசு தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் 50 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து நாளை பத்தாம் வகுப்பு அரசு தேர்வுகள் தொடங்குகின்றன. நாளை தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை  தேர்வுகள் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும்,  7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 61 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

61 தேர்வு மையங்களுங்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் பணியில் இருப்பார். இதைத் தவிர 61 துறை அலுவலர்களும் இவர்களுக்கு உறுதுணையாக தேர்வுப் பணிகளை கவனிப்பர். மாணவர்கள் தேர்வுகளில்  முறைகேடாக ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை கண்காணிக்க 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கு பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News