தொழிற்சாலையில் மரம் நட வேண்டும் - ஆட்சியர்

Update: 2021-02-11 11:30 GMT

சுற்றுசூழலை பாதுகாக்க தொழிற்சாலை வளாகத்தில் மரம் நடவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து தொழிற்சாலை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தொழிற்சாலை பிரதிநிதிகளிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் நிர்வாகிகளிடையே உரையாற்றுகையில் ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாயிரம் தொழிற்சாலைகள் உள்ள நிலையில் தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, மண் மற்றும் உலோக துகள்கள், கழிவுநீரால், நிலம், நீர், காற்று மாசுபடுகின்றன. காற்று மாசுபடுவதை தவிர்க்க, குடியிருப்பு பகுதிகள், சாலையோரத்தில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை வளாகங்களில் 25 சதவீத இடத்தில் மரங்களை வளர்த்து பராமரிக்க வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வைத்தார்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினை முறையாக சுத்திகரிப்பு செய்து அதன் பிறகு தான் வெளியேற்ற வேண்டும். திறந்தவெளி பகுதியிலோ அல்லது மழை நீர் செல்லும் கால்வாய்களிலோ , நீர் ஆதாரங்களிலோ திறந்து விடக் கூடாது. இதனை மீீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News