கவுந்தப்பாடி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கவுந்தப்பாடி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-25 15:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ரெட்டை வாய்க்கால் பகுதி சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலவாணி. இவர்களுக்கு விஷ்ணுபிரியா (25) என்ற மகளும், அருள்சாரதி (22) என்ற மகனும் உள்ளனர்.

அருள்சாரதி வெளிநாட்டில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கடந்த 6 மாதமாக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 21ம் தேதி பயிற்சியை முடித்து விட்டு சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக அருள்சாரதி வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என பெற்றோரிடம் புலம்பி வந்துள்ளார். அவர்கள் மகனுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள்சாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News