ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த கருத்தரங்கு

ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-05-28 01:45 GMT

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள தனியார் கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் ஈரோடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் கொங்கு மண்டலம் இந்திய இளைஞர் விடுதலை சங்கம் ஆகிய வற்றின் சார்பில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு மற்றும் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது .

ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி கலையரங்கில் நடந்த இந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் மல்லிகா வரவேற்று பேசினார். கொங்கு மண்டல இந்திய இளைஞர் விடுதிகள் சங்க தலைவர் ஐயப்பன், செயலாளர் ராஜா ஈரோடு இலஞ்சி சமூக நல இயக்க நிறுவனர் ஜானகி சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் உதவி அதிகாரி செல்வ கணபதி, கல்லூரி தாளாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது குறித்து விளக்கி பேசினார்கள் .

இந்த நிகழ்ச்சியில் காலநிலை மாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பு பேராசிரியர் மற்றும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் ஏன் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் வீடியோ மூலம் மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. முடிவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தமிழரசி நன்றி கூறினார்.

Tags:    

Similar News