ஈரோடு மாவட்டத்தில் நாளை (மார்ச்.31) மின்தடை

Erode news, Erode news today- ஈரோடு சின்னியம்பாளையம் மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-30 10:15 GMT

Erode news, Erode news today- நாளை மின்தடை அறிவிப்பு (பைல் படம்)

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நாளை (மார்ச்.31) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சின்னியம்பாளையம் மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சின்னியம்பாளையம் மின் நிலையம் (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை )

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

சின்னியம்பாளையம், கொள்ளுக்காட்டுமேடு, சிட்கோ, நஞ்சை ஊத்துக்குளி, கேட்டுபுதூர், முத்துக்கவுண்டன்பாளையம், பாரதி நகர், கருந்தேவன்பாளையம், தம்பிரான்வலசு, சாவடிபாளையம்புதூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Tags:    

Similar News