ஈரோட்டில் 'வாடியது' மல்லிகை விலை

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை ரூ.945 வரை குறைந்து, கிலோ ரூ. 1,400க்கு வி்ற்றது.

Update: 2022-12-26 07:39 GMT

Erode news, Erode news today- மல்லிகைப்பூ விலை குறைந்தது. (கோப்பு படம்)

Erode news, Erode news today -  சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஏலம் மூலம் வாங்கும் வியாபாரிகள் ஈரோடு மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர்.

குறிப்பாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தும் காணப்படும். தற்போது மார்கழி மாதம் என்பதால், முகூர்த்த நாட்கள் மிக குறைவு என்பதாலும், இதர விசேஷ நாட்கள் இல்லாததாலும், மல்லிகைப்பூ விலை குறைந்தது.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,400-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.80-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

இதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2 ஆயிரத்து 345-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.1,300-க்கும், செண்டுமல்லி ரூ.75-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.1,200-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனையானது.

நேற்று முன்தினத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோவுக்கு ரூ.945 குறைந்திருந்தது. அதேபோல் காக்கடா ஒரு கிலோ 650 ரூபாயும், ஜாதிமல்லி 200 ரூபாயும் குறைவாக ஏலம் போனது. மேலும் கனகாம்பரம் ஒரு கிலோ 200 ரூபாய் விலை உயர்ந்து விற்பனையானது.

இதுபற்றி பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'கிறிஸ்துமஸ் என்பதால் கேரள மாநில வியாபாரிகள் நேற்று முன்தினம் வந்து அதிக விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து சென்றனர். கிறிஸ்துமஸ் முடிந்ததால், கேரள வியாபாரிகள் குறைவாகவே வந்தனர். இதனால் பூக்கள் விலை குறைந்து விட்டது' என்றனர்.

Tags:    

Similar News