ஈரோடு மாவட்டத்தில் 25% ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை: பள்ளிகளில் 28ல் குலுக்கல்

ஈரோடு மாவட்டத்தில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான 25 % இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.

Update: 2024-05-25 01:45 GMT

கல்வி உரிமைச் சட்டம்.

ஈரோடு மாவட்டத்தில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான 25 % இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 2024-2025ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டு 2024-2025ம் கல்வியாண்டிற்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள 104 மெட்ரிக் பள்ளிகள், 1 சுயநிதி பள்ளி, 77 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,299 இடங்களுக்கு 3,137 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்தந்த பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் குலுக்கல் முறையில் வரும் 28ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News