விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெம்பக்கோட்டை ஊராட்சியில் பசுமை விடியல் என்ற திட்டத்தின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.0.250 லட்சம் மதிப்பீட்டில் மியாவாக்கி முறையில் 500 மரக்கன்றுகளை நடும் பணிகளையும், இனாம் மீனாட்சிபுரம் ஊராட்சியில் CSR Fund- - ன் கீழ் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் பி.யு. அரசு துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளையும், இனாம் மீனாட்சிபுரம் ஊராட்சியில் உதயம் என்ற தலைப்பில், CSR Fund- - ன் கீழ் ரூ.0.350 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் தனது மூன்று சக்கர வண்டியில் (CYCLE) சென்று பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் கழிப்பறையின் உள்ளே சென்று அவர்கள் எளிமையான முறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மேற்க்கிந்திய முறையில் (western toilet) அமைக்கப்பட்ட கழிப்பறையை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி, அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் திலகவதி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.