/* */

எம்ஜிஆரின் நினைவு நாள்: நெல்லையில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

HIGHLIGHTS

எம்ஜிஆரின் நினைவு நாள்: நெல்லையில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
X

நெல்லையில் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை- கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 34 ம் ஆண்டு நினைவு நாள். நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த முன்னால் முதல்வர், புரட்சி தலைவர் எம்ஜிஆர் இன் 34 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள அவரின் திருஉருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது கழக அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே பரமசிவன். கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, கழக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம்/ கழக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் ஆர் பி ஆதித்தன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட கழக துணை செயலாளர் கவிதா, அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட்,மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பகுதி கழக செயலாளர்கள் திருத்து சின்னதுரை, காந்திவெங்கடாச்சலம், ஜெனி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

Updated On: 24 Dec 2021 7:41 AM GMT

Related News