/* */

கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் - திருநெல்வேலி ஆட்சியர் அறிக்கை

கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் - சிறப்பு காவலர் பணியிடம் நிரப்புதல் தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..

HIGHLIGHTS

கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் - திருநெல்வேலி ஆட்சியர் அறிக்கை
X

கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள்

கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் - சிறப்பு காவலர் பணியிடம் நிரப்புதல் தொடர்பாக திருநெல்வேலி ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் கோயில் பாதுகாப்பு பணிக்கு திடகாத்திரமான ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களை பணியமர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது அதிகளவில் காலிப்பணியிடங்கள் உள்ளதால் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற / Texco - வில் பணிபுரிந்துஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் (53 - முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள்) தங்களது விருப்பத்தினை திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இப்பணிக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.7,300-வழங்கப்படும். எனவே திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச்

சார்ந்த முன்னாள் படைவீரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வே. விஷ்ணு தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 July 2021 3:16 PM GMT

Related News