/* */

திருச்சி போலீஸ் கமிஷனர் மாற்றம் -புதிய ஆணையராக கார்த்திகேயன் நியமனம்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளருமான எஸ். கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள அருண் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


திருச்சி மாநகர போலீஸ் புதிய ஆணையாளராக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக உள்ள ஜி. கார்த்திகேயன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேபோல் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றி வரும் ஏ.ராதிகா சென்னை ஐ.ஜி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக புதிய டி. ஐ.ஜி.யாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ.சரவண சுந்தர் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On: 23 Sep 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு