திருச்சி போலீஸ் கமிஷனர் மாற்றம் -புதிய ஆணையராக கார்த்திகேயன் நியமனம்
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளருமான எஸ். கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக உள்ள அருண் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர போலீஸ் புதிய ஆணையாளராக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக உள்ள ஜி. கார்த்திகேயன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆக பணியாற்றி வரும் ஏ.ராதிகா சென்னை ஐ.ஜி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக புதிய டி. ஐ.ஜி.யாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ.சரவண சுந்தர் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.