/* */

கரூர் மாணவி பாலியல் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

கரூர் பள்ளி மாணவி பாலியல் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் திருச்சி அருகே மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கரூர் மாணவி பாலியல் பிரச்சினையில் சிக்கிய ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
X

கரூரில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசாரும் பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சரவணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன் பள்ளியில் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது மாமனார் வீட்டிற்கு நேற்று வந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் செங்காட்டுப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் ஆசிரியர் சரவணன் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்து உள்ளது. அவரது உடலை துறையூர் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தொடர்பாக ஆசிரியர் சரவணன் எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 25 Nov 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!