/* */

4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்- கலெக்டர் உத்தரவு

4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்- கலெக்டர் உத்தரவு
X

தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையிலும், சுமூகமாகவும் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள மதுபானக்கூடங்கள் மற்றும் எப்எல் 2 , எப்எல் 3,உரிம மதுபானக்கூடங்களை ஏப்ரல் 4 ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 6 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ம் தேதி அன்று முழுவதும் மூட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்படின் தொடர்புடைய டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் தனியார் மதுபானக்கூட உரிமையாளர்கள் மீது உரிய விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் கலெக்டர் சாந்தா, தெரிவித்துள்ளார்.

Updated On: 2 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு