4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்- கலெக்டர் உத்தரவு
தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையிலும், சுமூகமாகவும் நடைபெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள மதுபானக்கூடங்கள் மற்றும் எப்எல் 2 , எப்எல் 3,உரிம மதுபானக்கூடங்களை ஏப்ரல் 4 ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 6 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ம் தேதி அன்று முழுவதும் மூட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.
இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்படின் தொடர்புடைய டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் தனியார் மதுபானக்கூட உரிமையாளர்கள் மீது உரிய விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் கலெக்டர் சாந்தா, தெரிவித்துள்ளார்.