Begin typing your search above and press return to search.
திருவாரூர் அருகே விளமலில் சி.ஐ.டி.யு. சார்பில் திடீர் மறியல் போராட்டம்
திருவாரூர் விளமலில் சி.ஐ.டி.யு. சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவாரூர் விளமல் எஸ். ஆர். எம். அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட மருந்துக் கிடங்கு, டாஸ்மாக் கிடங்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும் இதனை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் வட்டாட்சியர் அன்பழகன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக சாலை சீரமைப்பு செய்து தரப்படும் என அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருவாரூர்- மன்னார்குடி இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.