பொதுத்தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்களே பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துங்க....தேர்வுக் காலம் வரை....
பிள்ளைகளின் கைகளை பெற்றோர்கள் இறுக பற்றும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கை துளிர்விடுகிறது....
Parent Responsibility
தமிழகத்தில் உள்ள அனைத்து மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10 மற்றும் 12 ம்வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் பொதுத்தேர்வுகள் துவங்குகிறது.நாளை முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் துவங்குவதோடு இம்மாதம் 26 ந்தேதி முதல் 10 ம்வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் துவங்க உள்ளது. இந்த தேர்வுகள் நடக்கும் காலத்தில் வழக்கத்தை விட பெற்றோர்கள் அனைவரும் தே்ர்வெழுதும் பிள்ளைகளின் மீது அதிக கவனம் செலுத்தி பாருங்க... அவர்கள் உங்கள் கண்களிலேயே வைத்திருங்க...
Parent Responsibility
உணவு, உடை, உடல் ஆரோக்யம், துாக்கம்,படிப்பு ,ஸ்நாக்ஸ், குடிக்கும் தண்ணீர். போக்குவரத்து என இவைகள் உட்பட அனைத்திலும் நாம் சற்று கவனம் செலுத்தினால் அவர்களுக்கு எந்த பிரச்னைகளும் வர வாய்ப்பில்லை... மற்ற நேரங்களில் அவர்களின் விருப்பத்திற்குவிட்டாலும் தேர்வுகள் துவங்கி முடியும் வரை பெற்றோர்களில் இருவராகிய நம்மில் ஒருவர் அவரைக் கண்காணிக்க வேண்டியது மிக மிக அவசியமுங்க...அது நம் கடமையும் கூட....போன நாட்கள் திரும்ப வராது...இருக்கும் நாட்களை வைத்து திட்டமிட்டு படிக்க சொல்லுங்க...இரவில் அதிக நேரம் கண் விழிக்க அனுமதிக்காதீங்க... இரவு 10 மணிக்கு உறங்க சென்று விட வேண்டும் . அதிகாலை 4 அல்லது 5 மணி வாக்கில் எழுந்து படிக்கட்டுமே....
அன்பான வேண்டுகோள்கள். முதலில் தாத்தா பாட்டிகளுக்கு பெற்றோர்களுக்கு ….
1. தேர்வுகள் முடியும் வரை குழந்தைகளை எந்த கடுமையான சொற்களையும் சொல்லி... திட்டாதீர்கள் . அவர்கள் மனம் வருந்தும்படியான செயல்களை முற்றிலும் தவிருங்க...
2. ஏற்கனவே ஏதாவது பாடத்தில் குறைவான மதிப்பென் வாங்கியிருந்தால் அதனை ஞாபகப்படுத்தி அவர்களை குறை சொல்லாதீங்க...
3. குறிப்பாக தேர்வுகள் முடியும்வரை தொலைக்காட்சி சீரியல்களை கண்டிப்பாக தவிருங்கள் . முடிந்தால் தொலைக்காட்சி கேபிள் ./ டி.டி.ஹெச் தொடர்பையே துண்டித்து வையுங்களேன் .பெற்றோர்களே அவர்களுக்காக தியாகம் செய்யுங்க...
4. மசாலா உணவுகள் , ஐஸ்க்ரீம் , ஐஸ் போட்ட பழரச பானங்கள் இவற்றையெல்லாம் தேர்வுகள் முடியும் வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் , ஏன் பெற்றோர்களும் தவிர்க்கலாமே .
5. குழந்தைகள் விடிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும் , இரவு முழித்து படிப்பவராக இருந்தாலும் பெற்றோர்களில் அம்மா அல்லது அப்பா ஒருவராவது அவருடன் முழித்திருக்கவும்.
Parent Responsibility
6. தேர்வுகள் முடியும் வரை உங்களிருவரின் சொந்தங்கள் தெரிந்தவர்கள் என யாரும் வீட்டுக்கு வந்தால் சிறிது நேரம் பேசிவிட்டு குழந்தைகளின் தேர்வின் முக்கியத்துவத்தை தன்மையாக சொல்லி அனுப்பிவிடுங்கள்
7. பெற்றோர்கள் இருவருமே தங்களின் ஈகோவை ஒழித்து , நீயா நானா என சண்டை எதுவும் போடுவதை தேர்வுகள் முடியும் வரை ஒத்தி வையுங்கள் . சண்டைகளை ஆற அமர பிறகு போட்டுக்கொள்ளலாம் தேர்வுக்குப்பிறகு .
இனி மாணவர் களுக்கு ……
1. உங்கள் கவனம் முழுதும் உங்களின் வரவிருக்கும் தேர்வுகளின் மீதே இருக்கட்டும் .
2. விளையாட்டு , வேடிக்கை , முக்கியமாக செல்போன் , கம்ப்யூட்டரில் சாட்டிங் , காதல் இது போன்ற எல்லோவற்றுக்கும் தேர்வு முடியும் வரை தடை போடுங்கள் .
3. சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் இப்படி யாராவது ஏதும் தேர்வு பற்றி அட்வைஸ் சொன்னால் கேட்டுக்கொண்டு அதில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
4. படிப்பதற்க்கென்று தினமும் குறைந்தது 8 மணி நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் . இப்போது ஸ்டடி லீவு விட்டிருப்பார்கள். நேரத்தை எந்த சூழ்நிலையிலும் வீணாக்காதீர்கள்.
5. கடினமான கேள்வி பதில்களை பலமுறை எழுதிப்பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள் .
6. மறுநாள் தேர்வுக்கு தேவையானவற்றை முதல் நாளே தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் .
7. ஹால் டிக்கட் , பேனாக்கள் பென்சில் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை தேர்வுக்கு போய் வந்தவுடன் தேர்வுகள் முடியும் வரை ஒரே இடத்தில் வைத்து எடுங்கள் .
8. ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன் எப்படி எழுதினோம் எவ்வளவு மார்க் வரும் என கணிப்பதில் தவறு இல்லை . ஆனால் ஒரு கேள்விக்கு இப்படி தப்பாக பதில் எழுதி விட்டோமே , ஒரு 5 மார்க் குறைந்து விடுமே , செண்டம் வராதே என நினைத்து வருந்தி வருந்தி கவனத்தை சிதற விட்டு மறுநாள் தேர்வுக்கானதை படிப்பதில் அக்கறை குறைந்து விடவேண்டாமே .
Parent Responsibility
பதில் தப்பாக எழுதியாயிற்று என்பது முடிந்தது. அதற்கான விளைவு வந்து விட்டு போகட்டுமே . ஒவர்சைட்டில் மற்ற பதில்களெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் , கையெழுத்து அழகாக அல்லது புரியாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தவறான பதிலுக்கு முழு மார்க்கே கிடைக்கட்டுமே .
9. படிக்கும் நேரத்தில் ஏதாவது டவுட் கேட்கிறேன் என நண்பர்கள்யாருக்காவது போன் செய்தால் அல்லது சந்தேகம் கேட்டு உங்களுக்கு போன் வந்தால் அதற்குண்டான பதிலை மட்டும் சொல்லி விட்டு தொடர்பை துண்டித்து விடவும் . மேலும் க்ரூப் ஸ்டடி என திட்டமிட்டால் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி தேவையற்ற அரட்டைகளை அறவே தவிர்க்கவும் .
மாணவர்களே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நீங்கள் அனேகமாக மனதளவில் பொறுப்புள்ளவர்களாகத்தான் இருப்பீர்கள் . ஆனாலும் பெரியவர்கள் சொல்வதை சொல்லத்தானே வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்வினை மாற்றப்போகும் இந்த தேர்வுகளை நன்றாக எழுதி உங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கே நீங்கள் பெருமை சேர்த்துக்கொள்ள வேண்டும்....வாழ்த்துகள் மாணவர்களே....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu