நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி
நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்திருந்த தனியார் அருவிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்ததற்கு விவசாயிகள் நன்றி கூறினர்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய தொகையில் மரக்கன்றுகள் மற்றும் உழவு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விவசாய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் காய்கறிகளை கொண்டு செஸ் ஒலிம்பியாட் லோகோ, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மேக்கரை பகுதியில் விவசாயிகளின் 15 ஆண்டுகள் கோரிக்கையான நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள தனியார் அருவிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அருகே உள்ள கிராமங்களை சுற்றுச்சூழல் பகுதியை அறிவிக்க கருத்து கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மலையடிவாரப் பகுதிகள் அருகே உள்ள மது கடைகளை அகற்ற வேண்டும் அல்லது தமிழக அரசு அறிவித்துள்ள புதிய திட்டமான மது குப்பிகளுக்கு 10 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் மனு வழங்கப்பட்டது.