/* */

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபியை இழிவுபடுத்திப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மவுண்ட் ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் முஹம்மது மைதீன் ராசப்பா மற்றும் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு செயலாளர் தென்காசி முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசையும் பாஜக வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், மதிமுக செயலாளர் வெங்கடேஸ்வரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயுப் கான், முகம்மது நயினார், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபீக் அன்சாரி, நாகூர்மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...