Begin typing your search above and press return to search.
குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது
குற்றாலநாதர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது குற்றாலநாதர் திருக்கோயில். இந்தக் கோயில் புனித ஸ்தலங்களில் மிகவும் பெயர் பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது
ஆண்டுதோறும் சித்திரை விஷு திருவிழா பத்து நாட்கள் இந்த கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த ஐந்தாம் தேதி சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் என தினமும் நடைபெற்று வந்தது
திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் சுவாமி அம்பாள் முருகன் விநாயகர் என மொத்தம் நான்கு தேர்கள் சுற்றி வரும். இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.