தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து அய்யாபுரத்தை சேர்ந்த மணிக்குமார் என்பவரை 5 திருநங்கைகள் சேர்ந்து கொடுரமாக தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்காசி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த திருநங்கைகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் A.மணிமாறன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் K.S.பாலமுருகன் தலைமையில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் மு.நி.கா. மலர்கொடி ஆகியோர் இன்று தலைமறைவு எதிரிகளான திருநங்கைகள் சிவா என்கிற அம்பிகா, அக்பரலி என்கிற நஸ்ரியா, மனோஜ்குமார் என்கிற ரூபாஸ்ரீ, ஐயப்பன் என்கிற ஸ்ரீநிதி, செண்பகராமன் என்கிற மித்ரா ஆகியோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருநங்கைகள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.