/* */

தென்காசி மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை : தடுப்பணை மதகுகளை வீகே.புதூர் வட்டாட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக தாயார் தோப்பு தடுப்பணை மதகுகளை வீகேபுதூர் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை : தடுப்பணை மதகுகளை வீகே.புதூர் வட்டாட்சியர் ஆய்வு
X

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருவதால் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பெய்து தொடர்மழை காரணமாக, அடவிநயினார் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. விரைவில் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடவிநயினார் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர், வீ.கே. புதூர் அருகே தாயார் தோப்பு பகுதியில் உள்ள அனுமன் நதி மற்றும் சிற்றாறு சேருமிடத்தில் உள்ள தடுப்பணைக்கு வந்து சேருகிறது. இங்கிருந்து தண்ணீரை சீராக வெளியேற்றக்கூடிய அணை மதகுகளின் உறுதித்தன்மையை, வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், மண்டல துணை வட்டாட்சியர் சிவனு பெருமாள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

இந்த சிற்றாறு மற்றும் வீராணம் கண்மாய் தடுப்பணையில் உள்ள மதகுகளை போதுமான அளவு உயர்த்தி வைப்பது குறித்தும், அதிக அளவில் நீர் வரும்போது சிற்றாறு வழியாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் கால்வாய் வரை செல்வதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும், வெள்ளத்தால் கால்வாய், தடுப்பணையில் கரைகள் சேதமடைந்து மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 25 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு