சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி
சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி வந்தார்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப் பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்/
முன்னதாக மூலவர் ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை தேவியர்களுக்கு சந்தன காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து மங்கள வாத்தியங்களுடன் வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வானவேடிக்கை மற்றும் மின்னொளியில் பவனி வந்த முருகப் பெருமானுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்