சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா சிறப்பு திருத்த முகாம்
கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறவுள்ளது
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்தம் சிறப்பு முகாமை பட்டா தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள நடைபெறவுள்ள கணினி திருத்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 20.04.2022 அன்று தேவகோட்டை வட்டத்தில் சருகனி, ஆந்தக்குடி மற்றும் ஒருமணியேந்தல் குரூப்-குலமங்கலம் கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் செவரக்கோட்டை மற்றும் தேவரம்பூர் கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் மாத்தூர் மற்றும் சிலந்தங்குடி கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் வல்லகுளம் மற்றும் வலையனேந்தல் கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் அல்லூர் கிராமத்திலும் நடைபெறவுள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்அடைந்து கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.