Begin typing your search above and press return to search.
வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மனநிலை பாதித்தவர்களுக்கு தடுப்பூசி முகாம்
வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மனநிலை பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மனநிலை பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார். இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் மனநிலை பாதித்தவர்களுக்கான தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்காந்தி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது மருத்துவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.
பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதில்,இணை இயக்குனர் யாஷ்மின் மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி மற்றும் மனநல மருத்துவர் சிவாஜி ராவ் சதீஷ்குமார் தினேஷ்பாபு மன நலப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.