Begin typing your search above and press return to search.
இராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக பணிகளை அமைச்சர் எவ வேலு ஆய்வு
இராணிப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது . இந்நிலையில் , இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலம் 118.40கோடி, மதிப்பில் 3 லட்சத்து 9 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்களில் 25 அரசு துறைகளின் அலுவலகங்களைக் கொண்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது . வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அதிகாரிகளிடம் அவர் பணிகள் நடைபெறும் விதம் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்
ஆய்வின்போது அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்