/* */

காரை ஜெயபாரத் இரவுப் பள்ளித்திடலில் உடற்பயிற்சிகள் துவக்க விழா

ராணிப்பேட்டை , காரை பகுதியில் ஜெயபாரத் இரவுப் பள்ளித்திடலில் உடற்பயிற்சி மையம் துவக்கவிழா நடந்தது

HIGHLIGHTS

காரை ஜெயபாரத் இரவுப் பள்ளித்திடலில் உடற்பயிற்சிகள் துவக்க விழா
X

ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்தார் 

இராணிப்பேட்டை மாவட்டம் , இராணிப்பேட்டை நகராட்சியை சேர்ந்த காரைப் பகுதியில் ஜெயபாரத் இரவுப் பள்ளி இயங்கிவருகிறது பள்ளித்திடலில் மாணவர்கள்,மற்றும் இளைஞர்களின் உடல் வலிமை, மன வலிமை மற்றும் தேக ஆரோக்கியத்தை பேணுகின்ற வகையில் உடற்பயிற்சிகள் செய்ய பொது நலன்கருதி உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்து பேசினார்

அதில், மாணவர்கள் பப்ஜி, பிரீபையர் போன்ற ஆன்லைன் கேம்களை விளையாடாமல், தினமும் உடற் பயிற்சி எடுப்பது நல்லது. அதனால் எண்ணங்கள், சிந்தனைகள் சீர்படும். உடல் வலிமை பெறும் என்று உடற்பயிற்சியினால் உண்டாகும் நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து விரிவாக எடுத்து கூறினார்..

விழாவில், முன்னாள் கவுன்சிலர் ரவி, சிப்காட் போலீஸ் எஸ்.எஸ்.ஐ சேகர், பாண்டுரங்கன், எஸ்பிதனிப்பிரிவு சிஐடி வினோத் மற்றும் காரை பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2021 2:30 AM GMT

Related News