/* */

சட்டவிரோத குற்றங்கள் குறித்து எஸ்பியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

இராணிப.பேட்டை மாவட்டத்தில் நடக்கும் குற்றசம்பவங்கள் குறித்து பொதுமக்கள் நேரடி தகவல் தெரிவிக்கும் எண்ணை எஸ்பி அறிமுகம் செய்தார்

HIGHLIGHTS

சட்டவிரோத குற்றங்கள் குறித்து எஸ்பியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்
X

இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன், ரகசியத்தகவலாக தனக்கு மட்டுமே தெரிவிக்க புதிய மொபைல் எண்ணை அறிமுகம் செய்தார்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து வரும். குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில்,, சில குற்றங்களைக் காணும் பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவிப்பதில் அச்சம் காட்டி வருவதாகக் கருதப்படுகிறது.

எனவே, அதனைப்போக்கும் விதமாகவும் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிடவும் தைரியத்துடன் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கும் விதத்தில் குற்றங்களைத் தடுக்கும் நோக்காக இராணிப்பேட்டை, மாவட்ட எஸ்பி தீபா சத்தியன், ரகசியத்தகவலாக தனக்கு மட்டுமே தெரிவிக்க புதிய மொபைல் 7530026333 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார்.

மேலும் அவர் பொதுமக்கள் தங்கள் கண்ணெதிரே மற்றும்,பகுதியில் சட்ட விரோதமாக நடந்திடும் குற்ற நிகழ்வுகளை விரைவாக எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தெரிவிக்கும்படி பொது மக்களை கேட்டுக்கொள்வதாக கூறினார்

இது போன்ற தகவல், தன்னைத்தவிர யாருக்குமே தெரிவிக்கப்படமாட்டாது என்றும் அவர்உறுதி தெரிவித்தார். பின்னர் அவர், இது போன்ற இரகசியத்தகவல்கள் உண்மையாக இருக்குமானால் அவற்றின்மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் . என்றார்.

அதேபோல தகவல் தெரிவித்தவர்களுக்கு, அவர்களை பாராட்டும் விதமாக பணமாகவும்(அ) பரிசாகவும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி முத்துக்கருப்பன்,டிஎஸ்பி பூரணி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 28 Aug 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு