/* */

சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைப்பு

இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைப்பு
X

புங்கை, வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகளை நடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். 

நாட்டின் 5-வது சுதந்திர தினத்தையொட்டி இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில், அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

அறம் விழுதுகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முஹம்மது சலாஹீதீன் ஏற்பாட்டில் கோட்டப் பொறியாளர் சந்திரன் தலைமையில் 75-மரக்கன்றுகள் நடப்பட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டது.

புங்கை, வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி கோட்டப்பொறியாளர் பிரேமானந்த், உதவி பொறியாளர் முருகானந்தம், சாலை ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Aug 2021 9:22 AM GMT

Related News