புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி
புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி நடைபெற்றது
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் வருகிற 25-ஆம் தேதி ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கான முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமினை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி புதிய பேருந்து நிலையம், சாந்த நாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்