புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
இருசக்கர வாகனத்தில் சென்றும், உணவகத்தில் தோசை ஊற்றியும் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
HIGHLIGHTS
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் அத்தொகுதிக்கு உட்பட்ட காயாம்பட்டி, மேலகாயாம்பட்டி, ராயப்பட்டி, கதுவாரிபட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றும் அங்கு உள்ள ஒரு உணவகத்தில் தோசை ஊற்றியும், தமிழக அதிமுக அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் வாக்குகள் சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆராத்தி எடுத்து பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். மேலும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் வேட்பாளருக்கு இளநீர் நெல்லிக்காய் கொடுத்து தாகத்தைத் தனித்தனர்.