புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தாமாக தலைவர் ஆர்எல்.தமிழரசன்: ஜி .கே. வாசன் அறிவிப்பு
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றிய கூகூர் சண்முகம் உடல்நிலை சரியில்லாமல் காலமானார்
HIGHLIGHTS
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தாமாக தலைவராக ஆர்.எல். தமிழரசனை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றிய கூகூர் சண்முகம் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இதையடுத்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஆர்.எல். தமிழரசனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் எம்பி அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்து சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்தினார்.இந்த நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மூத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.எல். தமிழரசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.