தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புச்சோதனை நிறைவு
புதுக்கோட்டையில், தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.
HIGHLIGHTS
தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் மண்டல மேலாளர் நேசமணி விழுப்புரம் அலுவலகத்தில் நேற்று முன் தினம், விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ 36 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வந்த சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் மூன்று கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனையை, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜவகர் மற்றும் பீட்டர் ஆகியோர் முன்னிலையில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வந்தனர்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை, இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. 12 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் ரூ 3 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பங்குச்சந்தை முதலீடுகள் சம்மந்தமான ஆவணங்கள் கிடைத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.