/* */

தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புச்சோதனை நிறைவு

புதுக்கோட்டையில், தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.

HIGHLIGHTS

தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புச்சோதனை நிறைவு
X

தமிழ்நாடு வனத் தோட்டக் கழக மண்டல மேலாளர் நேசமணியின் புதுக்கோட்டை வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்தது

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் மண்டல மேலாளர் நேசமணி விழுப்புரம் அலுவலகத்தில் நேற்று முன் தினம், விழுப்புரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ 36 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வந்த சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் மூன்று கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனையை, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் ஆய்வாளர்கள் ஜவகர் மற்றும் பீட்டர் ஆகியோர் முன்னிலையில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வந்தனர்.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை, இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. 12 மணி நேரத்திற்கும் மேலாக அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் ரூ 3 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பங்குச்சந்தை முதலீடுகள் சம்மந்தமான ஆவணங்கள் கிடைத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 12 Oct 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு