பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கொரோனா நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ எம்.சின்னத்துரை ,பெரம்பலூர் அரியலூர் மாவட்ட குழு செயலாளர் ஆர்.மணிவேல் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நபர்கள் இணைந்து மாவட்டத்தில் நகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் பெரும் தொற்று அதிகரிப்பதை தடுத்திட விரைந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தன்னார்வலர்களை கொண்டு விழிப்புணர்வு வழங்குவது,
நோய்த் தடுப்பு மையங்கள் ஏற்படுத்துவதோடு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், மருத்துவமனைகளும், தடுப்பு மையங்களில் கூடுதலாக ஏற்படுத்தவேண்டும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவு வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.