நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்    கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் உமா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் உமா கலந்துகொண்டு, 7 பயனாளிகளுக்கு ரூ. 8.17 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, மொத்தம் 385 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில் 4 பயனாணிகளுக்கு ரூ. 7.85 லட்சம் பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 பேருக்கு தலா ரூ. 15,750 வீதம் ரூ. 31,500 மதிப்பில் சக்கர நாற்காலிகள் மற்றும் 1 மாற்றுத்திறனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டை, என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ. 8. 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்ட சப்கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story
திருநங்கைகளின் திருவிழா -  கூத்தாண்டவர் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு!