நாமக்கல், கொல்லிமலை அரசு ஐடிஐ-ல் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை
ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு ஐடிஐ நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாமக்கல் ஐடிஐ-ல் ஆண்கள், பெண்களுக்கு இரண்டு ஆண்டு படிப்பாக, எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கும், ஓராண்டு படிப்பாக மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் ஆகிய தொழிற்பிரிவிற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெண்களுக்கு மட்டும் ஓராண்டு படிப்பாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் , புரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் இரண்டு ஆண்டு தகவல் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் பராமரிப்பு போன்ற தொழிற்பிரிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்டுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கொல்லிமலை அரசு ஐடிஐல் பிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக் டீசல் இன்ஜின், வெல்டர், தையல் பயிற்சி ஆகிய பிரிவுகளில் இடம் கிடைத்திட வாய்ப்புள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் அக்.30ம் தேதி வரை https://skilltraining.tn.gov.in என்ற இண்டர்நெட் முகவரியில் விண்ணப்பிக்கலாம். அல்லது, நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா லேப்டாப், சைக்கிள், சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், மாதம் ரூ.750 உதவித்தொகை மற்றும் இலவச ஹாஸ்டல் வழங்கப்படும். பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சியும், பயிற்சிகாலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu