கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த் திருவிழா துவக்கம் : வரும் 15ம் தேதி தேரோட்டம்

கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த் திருவிழா   துவக்கம் : வரும் 15ம் தேதி தேரோட்டம்
X

கீரம்பூர் எட்டுக்கையம்மன் (பைல் படம்).

கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த்திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது. வருகிற 15ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற எட்டுக்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த மே 6ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி காலையும் மாலையும் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று, மகா தீபாராதணை நடைபெறும், தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற மே 15ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை முதல், கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைப்பார்கள். தொடர்ந்து காலை 9 மணிக்கு, சுவாமி உற்சவர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் பக்தர்கள் தேர்வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேர் திருவீதி உலா வந்து நிலை சென்றடையும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு எட்டிக்கம்மனை வழிபடுவார்கள். இரவு 8 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும். இரவு 10 மணிக்கு நாடகம் நடைபெறும். 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் திருவிழாக் குழுவினர் செய்துள்ளனர்.

Next Story