மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார்

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார்
X
குமாரபாளையம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார்

குமாரபாளையம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 33. இவரது தந்தை வேலுமணி, 52. வேலுமணியிடம், லாரி விற்பனை புரோக்கர்களான முருகேசன், சுப்ரமணி ஆகியோர், லாரி ஒன்று விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளனர். கொங்கனாபுரம் வழியில் ஒருக்காமலை பகுதியில் உள்ள ஒரு லாரி பட்டறையில், எடப்பாடி அருகே கட்சுப்பள்ளி பகுதியை சேர்ந்த செல்லப்பன் என்பவருக்கு சொந்தமான லாரியை காட்டியுள்ளனர். இந்த லாரியை 18 லட்சத்து 25 ஆயிரம் விலை பேசினர். நிதி நிறுவனத்தில் உள்ள கடன் தொகை 13 லட்சம் போக, 5 லட்சத்து 25 ஆயிரம் உரிமையாளர் வசம் ஒப்படைந்தனர். இந்த லாரி மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டியும், நீதிமன்றம் சார்பில் கூறியதன் பேரில் இந்த லாரியை சிவகுமார் தரப்பினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த லாரி மீது மணல் கடத்தல் வழக்கு உள்ளது என்பதை மறைத்து, லாரியை விற்பனை செய்த செல்லப்பன் மீது, சிவக்குமார், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
திருச்செங்கோடு அருகே ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசு..!
நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது போலீசில் புகார்
புத்தகத் திருவிழா பெயரில் கட்டாய வசூல் – ஆசிரியர் மன்றத்தின் கடும் கண்டனம்
சேந்தமங்கலத்தில் ரேஷன் அரிசி பதுக்கல் – 450 கிலோ பறிமுதல்..!
குமாரபாளையம் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் உதவி: 40 நாற்காலிகள் வழங்கும் விழா
ஈரோடு ஓட்டுச்சாவடி மையத்தில் பரபரப்பு: தி.மு.க. மற்றும் நா.த.க. வாதம்
குண்டு எறிந்து சாதனை : 88 வயதிலும் சாதித்து காட்டி கோல்டு மெடலை குவித்த முதியவர்!
மத்தியபிரதேசத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு கடுகு புண்ணாக்கு வருகை..!
ஒரு பெண்ணின் ஓட்டை மற்றொருவர் பதிவு செய்தது - ஓட்டுப்பதிவில் குழப்பம்
நாமக்கல்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்
சித்தர் மலை வனப்பகுதியில் குரங்குகளுக்கு உணவு, தண்ணீர் தட்டுப்பாடு
தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு  சிவன்மலை கோவிலில் கொடியேற்ற விழா..!