மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கும் வாயில்லா ஜீவன்
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கும் வாயில்லா ஜீவன்
மதுரையில், போக்குவரத்து விதிகளை மதிக்கும் பசு மாடு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
போக்குவரத்து சிக்னலை விதிகளை கடைபிடித்து ஜீப்ரா லைனிங் பாதசாரியுடன் சாலையை கடக்கும் பசு மாடு வீடியோ வைரலாகி வருகிறது.சிக்னல்களில் போட்டவுடன் முறையாக இருசக்கர வாகனங்களும் வெள்ளைக்கோட்டில் மீது தாண்டி நிறுத்துவதும், பாதசாரிகளுக்காக போடப்பட்டுள்ள
ஜீப்ரா லைனிங் வெள்ளைக்கோடுகளில் மனிதர்கள் நடக்காமல் ஏனோ தானோ என்று குறுக்கே நடக்கும் மனிதர்களுக்கு இடையே, மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் சிக்னலில் பசுமாடு ஒன்று நாளா புறமும் கவனித்து சிக்னல் போட்ட பிறகு ஜீப்ரா லைனிங் லைனில் பசுமாடு கடந்து சென்றது. இணையத்தில், தற்போது வைரலாகி வருகிறது .
ஐந்து அறிவு உள்ள ஜீவனுக்கு இதை பார்த்தாவது ஆறு அறிவு படைத்த மனிதர்கள் சிக்னல்களை மதித்து வெள்ளை கோட்டுக்குள் நடந்த செல்வார்களா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu