மத்திய அரசைக் கண்டித்து மதுரை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மத்திய அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து வாடிப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு பெட்ரோல்,டீசல்,சமையல், கேஸ் விலைவாசி உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் ஒ.எம்.முருகானந்தம், வட்டாரத்தலைவர் ஐ.கே. குருநாதன், பழனிவேல், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவு மாநில துணைத்தலைவர் மூர்த்தி வரவேற்றார். இந்த ஆர்பாட்டத்தை, மாவட்டப் பொருளாளர் நூர்முகமது தொடக்கி வைத்தார். மனிதஉரிமை மாவட்டத்தலைவர் ஜெயமணி, ஆர்பாட்டத்தை விளக்கி பேசினார்.
இதில், ஒ.பி.சி.அணி மாவட்ட த்தலைவர் முருகன், முன்னாள்சேர்மன் திலகராஜ், சோமசுந்தரம், சிவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் பிரசன்னா, வைரவன், முத்துபாண்டி, சுன்னாம்பூர்பாண்டி, இளவரசன்,சங்கரபாண்டி, அய்யங்காளை, முத்து, சேது,பொன்கார்த்திக், சசிக்குமார், மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லப்பா சரவணன் ஆர்பாட்டத்தை முடித்துவைத்தார். முடிவில், இளைஞா; காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu