Begin typing your search above and press return to search.
எடப்பாடி பழனிசாமி உருவ படம் எரிக்க முயற்சி
கரூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
HIGHLIGHTS
கரூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
கரூர் மாவட்ட சீர்மரபினர் நல சங்கம் மற்றும் 115 சமுதாய கட்சிகள் கூட்டமைப்பு தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் கரூர் ராயனூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட 115 சமூகங்களின் இட ஒதுக்கீடு உரிமையை பறித்துள்ளாதாக முழக்கம் எழுப்பினர்.
இதனையடுத்து, பாரபட்சமாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டை கண்டித்து அவரின் உருவபடத்தையும் எரிக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த தாந்தோன்றிமலை காவல் நிலையப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.