/* */

குமரி காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து

குமரி காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆட்டோ 4 டூ வீலர் முற்றிலும் சேதம்.

HIGHLIGHTS

குமரி காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து
X

குமரி காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆட்டோ 4 டூ வீலர் முற்றிலும் சேதம்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனோ ஊரடங்கு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அரசின் உத்தரவு மற்றும் கொரோனோ விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்த காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

காவல்நிலையத்தில் உள்ள போலீசார் அனைவரும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

தீ விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் உஷா இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் அங்கு நின்ற 3 ஆட்டோக்கள் மற்றும் 4 பைக்குகள் எரிந்து சாம்பலாயின.

விசாரணையில் கன்னியாகுமரியில் சுற்றித் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீய வைத்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 18 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு