/* */

காஞ்சிபுரம் : சாய்ந்த மின்மாற்றியினை நிலை நிறுத்துமா மின்சார வாரியம் ?

காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் கிறிஸ்துவ கல்லறை எதிரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றியை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : சாய்ந்த மின்மாற்றியினை நிலை நிறுத்துமா மின்சார வாரியம் ?
X

காஞ்சிபுரம் - ஏனாத்தூர் சாலையில் கிருஸ்துவ கல்லறை எதிரே சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி

காஞ்சிபுரம் மின் பகிர்மான மற்றும் பராமரிப்பு சார்பில் காஞ்சிபுரம் சுற்று பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஒரு மாதமாக மின்தடை ஏற்படாமலிருக்க மாவட்டம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வாரம் ஒருமுறை ஒவ்வொரு பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கபட்டு மின் மாற்றிகள் முழுவதும் பராமரிக்கப்பட்டு பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் - ஏனாத்தூர் சாலையில் கிருஸ்துவ கல்லறை எதிரே மின்வாரியத்திற்கு சொந்தமான மின் மாற்றி சாய்ந்த நிலையில் ஆபத்தை விளைக்க கூடிய நிலை உள்ளது. இதன் அருகிலேயே பல மின்கம்பங்கள் சார்ந்தே உள்ளது. இப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க பொதுமக்கள் சென்று வருவதால் ஆபத்தைச் சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே காஞ்சி மின் பகிர்மான வட்டம் உடனடியாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Aug 2021 4:15 AM GMT

Related News