வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை: 2 பெண்கள் உள்பட 19 பேர் கைது..!
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு வடக்கு, தெற்கு, கருங்கல்பாளையம், பெருந்துறை, திங்களூர், கவுந்தப்பாடி, கோபி, சிறுவலூர், பங்களாபுதூர், புளியம்பட்டி, பவானிசாகர், கடத்தூர் போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த பவானி மெயின்ரோடு, சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (43), வீரப்பன் சத்திரம், கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (35), குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த மருதமுத்து (62), கோபி, கோரக்காட்டூரை சேர்ந்த செந்தில் (45), சத்தியை அடுத்துள்ள அரியப்பம்பாளையம், புதுகொத்துக்காடு பகுதியை சேர்ந்த மணியாள் (50), உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 479 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu