/* */

பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை - 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே , பட்டப்பகலில் அரசு ஊழியரின் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை - 4 பேர் கைது
X

கொள்ளை வழக்கில் கைதானவர்கள். 

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் குடியிருப்பவர் துரை/ இவர் போக்குவரத்துதுறை அலுவலர் ஆவார். இரு தினங்களுக்கு முன்பு, காலை 10 மணிக்கு வழக்கம்போல் துரை வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி சுஜாதா (55) வீட்டில் தனியாக இருந்தார்.

வீட்டினை நோட்டமிட்ட 4 பேர்கொண்ட மர்ம கும்பல், வீட்டிற்குள் புகுந்து சுஜாதாவை கட்டிப்போட்டு அவரிடம் இருந்து பீரோ சாவியை பறித்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் எஸ்பி சீனிவசன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் பொன்னகரத்தை சேர்ந்த ஆசைத்தம்பி ( 36), பர்மா காலனியை சேர்ந்த சுரேஷ் (32), கரூரை சேர்ந்த மதன்குமார்(25), திருச்சியை சேர்ந்த சிவா(24) ஆகிய 4 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து அவர்களிடமிருந்து 7 சவரன் நகைகள் மற்றும் பணம் ரூ.50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!