/* */

அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படம்: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படத்தை வைக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம் நிறைவேற்றம்

HIGHLIGHTS

அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படம்: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம்
X

தர்மபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நடிகர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சின்னகண்ணன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.பாரதியார் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து முன்னாள் மாநில செயலாளர் கவிஞர் ரவீந்திரபாரதி பேசினார்.

கூட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்த தமிழக அரசை தமிழ்நாடு பாராட்டி வரவேற்கிறது. அனைத்து பள்ளி,கல்லூரிகளில் பாரதி நூற்றாண்டு விழா நடத்த முயற்சிகள் மேற்கொள்வது, அனைத்து அரசு அலுவலகம்,பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாரதியாரின் உருவ படத்தை வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி, அரூர், பாப்பாரப்பட்டி ஆகிய 3 மையங்களில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் பாரதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.மணி,மாவட்டக்குழு உறுப்பினர் வணங்காமுடி, ஓய்வு பெற்ற தாசில்தார் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Sep 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு