தேசிய அளவில் விளையாட்டு போட்டி: பதக்கம் பெற்றவர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து
தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.
HIGHLIGHTS
ஹரியானா மாநிலத்தில் கடந்த 24 முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான அரசு பணியாளர்களுக்கான இறகு பந்து போட்டியில், தர்மபுரி மாவட்டத்தின் சார்பில் கே.சரவணன், ஜி.சிவப் பிரகாசம், என்.இராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 28 முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான அரசு பணியாளர்களுக்கான கபடி போட்டியில் ஜவஹர், டி.பழனி ஆகியோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 24 முதல் 28ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான 66-வது இளையோர் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் எம்.லோகேஷ் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 7 முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து மகாலட்சுமி பங்கேற்று 65 வயது பிரிவில் 80 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
தங்கம்மாள் பங்கேற்று 70 வயது பிரிவில் தட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றனர். பரமசிவம் பங்கேற்று 75 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டி, ஈட்டி எறிதல் போட்டி மற்றும் தட்டு எறிதல் போட்டி ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
கங்காதரன் மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்று 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
இவர்கள் அனைவரும் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினியை நேரில் சந்தித்து, பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தே.சாந்தி அவர்கள் உடனிருந்தார்.