/* */

கடலூரில் ஊரடங்கு நேரத்தில் நூதன முறையில் மது கடத்திய வாலிபர் கைது

புதுவையில் இருந்து கடலூருக்கு மேல்சட்டையின் உள்ளே பனியன் போல் நூதன முறையில் சாராய கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடலூரில் ஊரடங்கு நேரத்தில் நூதன முறையில் மது கடத்திய வாலிபர் கைது
X

கடலூரில் நூதன முறையில் பாக்கெட் சாராயம் கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திலும் அதன் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு கடலூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும் நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 54 சோதனைச் சாவடிகள் அமைத்து 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கடலூர் புதுவை எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். புதுவையில் ஊரடங்கு இல்லாததால் வழக்கம் போல் மதுகடைகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுகடை மூட்டப்பட்டுள்ளதால் தமிழக மதுபிரியர்கள் நடந்தே புதுவை மாநிலத்திற்கு சென்று மது குடித்துவிட்டு வந்தனர்

அப்போது வெள்ளகரை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் புதுவை கள்ளசாராய பாக்கெட்டுகளை தனது மேல்சட்டையின் உள்ளே பனியன் போல் கட்டிகொண்டு கடத்தி வந்து விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார் முழு ஊரடங்கு சோதனையின் போது கடலூர் போலீசாரிடம் சிக்கிகொண்டார்.

Updated On: 10 Jan 2022 1:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  4. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்