கடலூரில் ஊரடங்கு நேரத்தில் நூதன முறையில் மது கடத்திய வாலிபர் கைது
புதுவையில் இருந்து கடலூருக்கு மேல்சட்டையின் உள்ளே பனியன் போல் நூதன முறையில் சாராய கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திலும் அதன் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு கடலூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும் நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 54 சோதனைச் சாவடிகள் அமைத்து 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கடலூர் புதுவை எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். புதுவையில் ஊரடங்கு இல்லாததால் வழக்கம் போல் மதுகடைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுகடை மூட்டப்பட்டுள்ளதால் தமிழக மதுபிரியர்கள் நடந்தே புதுவை மாநிலத்திற்கு சென்று மது குடித்துவிட்டு வந்தனர்
அப்போது வெள்ளகரை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் புதுவை கள்ளசாராய பாக்கெட்டுகளை தனது மேல்சட்டையின் உள்ளே பனியன் போல் கட்டிகொண்டு கடத்தி வந்து விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளார் முழு ஊரடங்கு சோதனையின் போது கடலூர் போலீசாரிடம் சிக்கிகொண்டார்.