/* */

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட  ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு
X

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் தற்போது ஒமிக்ரான் மற்றும் உருமாறிய கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக மொத்தம் 439 வார்டுகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒமிக்ரான் தொற்று சிகிச்சைக்கு 32 படுக்கையுடன் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டும் ஆக்ஸிஜன் இல்லாத தேவைப்படும் பட்சத்தில் ஆக்ஸிஜன் பொருத்தக்கூடிய நிலையில் 32 படுக்கை வசதியுடன் ஒரு கொரோனா வார்டும் குழந்தைகளுக்கான 100 படுக்கையுடன் கூடிய சிறப்பு கொரோனா வார்டும் தயார் நிலையில் உள்ளதாகவும் அப்போது கூறினார்.

மேலும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு இதுவரை ஒமிக்ரான் தொற்றுடன் ஒரு நபர்கூட வரவில்லை. இன்று ஒரேநாளில் உருமாறிய கொரோனா தொற்று 28 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மருத்துவமனையில் போதுமான படுக்கைவசதி மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு பற்றியும் கூறினார். அதனை தொடர்ந்து கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு கொரோனா அறிகுறி குறித்து பிரிசோதனை செய்யும் வார்டு ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 6 Jan 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை