/* */

தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்ப்பேரரசுகட்சி சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் மே தின விழா கொண்டாட்டம்
X

அரியலூர் மாவட்டத்தில் தமிழ் பேரரசு கட்சி சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூரில் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.மாத்தூர் பேருந்து நிலையத்தில் அக்கட்சியின் திருச்சி மண்டலத் தலைவர் முடிமன்னன் கட்சிக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் சிவகுருநாதன், மாவட்ட தலைவர் ரகுபதி, மாவட்ட அவைத்தலைவர் மாரிமுத்து உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் தொடர்ந்து கள்ளத்தனமான மதுபான விற்பனையை ஊக்கப்படுத்தி வரும் குவாகம் காவல்நிலைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது. சிமென்ட் ஆலைகள் அரசின் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குவது கண்டித்து சிறைபிடிப்பு போராட்டம் நடத்துவது. அசாவீரன் குடிக்காடு வி.ஏ.ஓ. தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 2 May 2022 6:45 AM GMT

Related News