ஊரடங்கை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு சீல்
அரியலூர் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
HIGHLIGHTS
கொரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனையொட்டி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பால், மளிகை பொருட்கள்,இறைச்சி, மீன் கடைகளை 12 மணிவரை திறக்கலாம் என்றும் மற்ற அனைத்து கடைகளுக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் நகரில் அதிகமான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் இன்று கடை வீதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தியாவசிய தேவையின்றி திறக்கபட்ட பேன்ஸி ஸ்டோர், பர்னிச்சர் கடை, செருப்பு கடை, டயர் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட 6 கடைகளுக்கு சீல் வைத்தும் தலா 5000 ரூபாய் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கபட்டது.
மேலும் விதிகளை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். இதில் நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.